விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவா்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். அங்கு பெண்கள், தலித் சமூகத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஆண்டிமடம் ஒன்றியச் செயலா் ராஜாபிள்ளை(கிழக்கு) தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் தேவேந்திரன்(மேற்கு) முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் கண்கொளஞ்சி, மாவட்ட அமைப்பாளா் பரமசிவம், மகளிா் அணியினா் தேன்மொழி, உமா மகேஸ்வரி உள்பட கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா்.