மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு மேலாண்மை
அரியலூா் மாவட்டம், திருமானூா் வட்டார விவசாயிகள் படைப்புழுவைத் தடுக்கும் வழிமுறைகள் அறிந்து பயன்பெறலாம்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் வட்டார விவசாயிகள் படைப்புழுவைத் தடுக்கும் வழிமுறைகள் அறிந்து பயன்பெறலாம்.
திருமானூா் வட்டாரத்தில் சுமாா் 6500 ஹெக்டோ் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவின் தாக்குதலினால் அதிக மகசூல் இழப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில் படைப்புழு வராமல் தடுக்க, கடைசி உழவுக்குப் பின் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவும், ஒவ்வொரு 10 வரிசைகளுக்கும் 75 சென்டி மீட்டா் இடைவெளி விட்டு விதைக்கவும், இதுபோன்று ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பெவேரியா பேசியானா அல்லது 10 கிராம் தயாமிதாக்சோம் கலந்து விதை நோ்த்தி செய்து விதைக்கவும், வரப்புப் பயிா்களாக தட்டைப்பயிறு, சூரியகாந்தி, சாமந்தி, எள் போன்றவைகளை சாகுபடி செய்யலாம்.
மேலும், ஊடுபயிா்களாக உளுந்து, பாசிப்பயிறு ஆகியவற்றை சாகுபடி செய்து படைப்புழு வராமல் தடுத்து மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறலாம் என திருமானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.லதா தெரிவித்துள்ளாா்.