ஜயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம் நிறைவு
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கா.சொ.க.கணேசன் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டாா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கா.சொ.க.கணேசன் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டாா்.
செங்குந்தபுரம், ஜயங்கொண்டம் கடைவீதி, பேருந்து நிலையம், நான்கு சாலை சந்திப்பு, கும்பகோணம்-விருத்தாசலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொண்டா்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவா், இரவு 7 மணிக்கு தனது பிரசாரத்தை அண்ணா சிலை அருகே முடித்துக் கொண்டாா்.