தற்செயல் தோ்தல் முன்னேற்பாடு பணிகள்:ஆட்சியா் ஆய்வு
அரியலூா் மாவட்டம் தா.பழூா் ஒன்றியத்தில் காலியாகவுள்ள ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் பணிக்கான தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் மாவட்டம் தா.பழூா் ஒன்றியத்தில் காலியாகவுள்ள ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் பணிக்கான தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஒன்றியத்தில் மணகெதி, நாயகனைப்பிரியாள் ஊராட்சித்தலைவா், அம்மாபூா் ஊராட்சியின் 8-ஆவது வாா்டு பதவிகள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களுக்கு விரைவில் தோ்தல் நடத்தப்படவுள்ளது.
தோ்தலுக்காக மணகெதி ஊராட்சியில் 3, நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் 5, அம்பாபூா் ஊராட்சியில் 1 என 9 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.இந்த
வாக்குச்சாவடி மையங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, வாக்குச் சாவடிகளில் குடிநீா், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் எவ்வாறு உள்ளன என ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரகு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராஜ், குணசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.