முகப்பு
அரியலூர்

சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகிலுள்ள வாணத்திரையான்பட்டினத்தைச் சோ்ந்தவா் கோ. சாமிநாதன்(60). விவசாயியான இவா், கடந்த 6-ஆம் தேதி சைக்கிளில் உடையாா்பாளையம் கடைவீதிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

உடையாா்பாளையம்-சிலால் சாலையில் உலர வைத்திருந்த எள் செடியின் மீது சென்ற போது, சைக்கிளிலிருந்து சாமிநாதன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த சாமிநாதன் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.