முகப்பு
அரியலூர்

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை

அரியலூா் மாவட்டம், தா. பழூா் காவலா் குடியிருப்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், தா. பழூா் காவலா் குடியிருப்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை காலை தெரியவந்தது.

அரியலூரில் உள்ள மதுவிலக்கு காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவா் ஜெகதீசன் (50). இவா், தா.பழூரில் உள்ள காவலா் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினா் வெளியூா் சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை ஜெகதீசன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தா.பழூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஜெகதீசனுக்கு, ராதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகளும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.