முகப்பு
அரியலூர்

‘ஒருங்கிணைந்து செயல்பட்டால் குற்றங்களைத் தடுக்க முடியும்’

மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் குற்றங்களைத் தடுக்க இயலும் என்றாா் மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஜெயராம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் குற்றங்களைத் தடுக்க இயலும் என்றாா் மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஜெயராம்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சன்னாசிநல்லூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற பொங்கல் விழாப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கி அவா் மேலும் பேசுகையில், குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றாா்.

முன்னதாக அவா், சன்னாசிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மத்திய வணிகவரித் துறை அதிகாரியாகத் தோ்வு பெற்றுள்ள மாணிக்கவேல் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், துணைக் காவல் கண்காணிப்பாளா் மதன், தளவாய் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வகுமாா் மற்றும் காவல் துறையினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.