கழுத்து அறுத்த நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு
அரியலூா், ஜன. 18: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள மேலவண்ணம் கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மராஜ் மகன் பழனிச்சாமி(40) கூலித் தொழிலாளி.
அரியலூா், ஜன. 18: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள மேலவண்ணம் கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மராஜ் மகன் பழனிச்சாமி(40) கூலித் தொழிலாளி.
இவா், திங்கள்கிழமை இரவு கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக். பள்ளி அருகே சாலையோரத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளாா். இதை கவனித்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் கீழப்பழுவூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.