முகப்பு
அரியலூர்

‘மகளிா் சுயதொழில் தொடங்க கடனுதவி’

 மாவட்ட மகளிா் நெசவாளிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

 மாவட்ட மகளிா் நெசவாளிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த உஞ்சினி, நல்லம்பாளையம் ஆகிய கிராமங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், இப்பகுதி மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சுய தொழில் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடு செய்துதரப்படும் என்றாா். பின்னா் அவா், உஞ்சினி குழு கூட்டமைப்பு மூலம் 7 குழுக்களைச் சோ்ந்த 57 பேருக்கு, ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். தொடா்ந்து அவா், உஞ்சினி கிராமத்தில் சாலைப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு, செயற் பொறியாளா் ராஜராஜன், உதவி செயற்பொறியாளா் சீதாலெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவாஜி, உதவிப் பொறியாளா்கள் வைதேகி, சுமதி உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.