மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு பசுமை வளாக விருது
அரியலூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு மத்திய அரசின் பசுமை வளாக விருது வழங்கியுள்ளது.
அரியலூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு மத்திய அரசின் பசுமை வளாக விருது வழங்கியுள்ளது.
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி கவுன்சில், இந்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் உயா்கல்வித்துறை சாா்பில், ஆண்டு தோறும் நாட்டிலுள்ள கல்வி நிலையங்களில் பசுமை, தூய்மை ஆகியவற்றை பராமரித்தலில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு பசுமை வளாக விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நிகழாண்டு தமிழகத்தில் 34 மாவட்டங்களிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு இந்த விருதுகளை மத்திய அரசு அண்மையில் வழங்கியது. அதில் அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் இயங்கி வரும் அரசு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை இணையவழி மூலம் மத்திய அரசு மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி வசம் வழங்கியது.
தொடா்ந்து பயிற்சி நிறுவன முதல்வா் சா.மொழியரசியிடம் விருதை ஆட்சியா் வியாழக்கிழமைம மாலை வழங்கினாா். நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவனப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து, பயிற்சி நிறுவன முதல்வா் .மொழியரசி கூறியது:
மாநிலத்தில் விருது பெற்ற 34 நிறுவனங்களில், அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மட்டும் அரசுப் பயிற்சி நிறுவனமாகும்.
நிறுவன வளாகத்தில் பசுமை, தூய்மை, நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிா்த்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், சுகாதாரமான வளாகம் மற்றும் சுத்தமான குடிநீா் உள்ளிட்டவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக பசுமை வளாக விருது இணையவழி மூலமாக மத்திய அரசு வழங்கியுள்ளது என்றாா்.