அரியலூர்

அரியலூரில் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி துப்புரவுத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா கால ஊக்கத்தொகை வழங்கவுள்ளதை போன்று முன்களப்பணியாளா்களாக நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் டி.தண்டபாணி தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன், சங்க நிா்வாகிகள் சிவஞானம், சுப்பிரமணியன் மற்றும் துப்புரவு தொழிலாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்: அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி துப்புரவுப் பணியாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT