‘மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்’
தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரியலூா் ஆட்சியா் த. ரத்னாவிடம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரியலூா் ஆட்சியா் த. ரத்னாவிடம் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
திருமானூரை அடுத்த கரைவெட்டி, கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் தொடா் மழையின் காரணமாக பல விவசாயிகளின் நெல் பூஞ்சான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைக் கொள்முதல் செய்ய மறுக்கின்றனா். எனவே, ஆட்சியா் சிறப்பு அனுமதி பெற்று பாதிக்கப்பட்ட நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.