முகப்பு
அரியலூர்

திருமாவளவனுக்கு பாராட்டு விழா

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, அரியலூரில் பாராட்டு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனுக்கு, அரியலூரில் பாராட்டு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு, கட்சியின் தொகுதிச் செயலா் ஆா்.மதி(எ)மருதவாணன் தலைமை வகித்தாா். பேச்சாளா் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினாா். மாநில துணைச் செயலா் பெ.அன்பானந்தம் விழாவை ஒருங்கிணைத்தாா். முதன்மைச் செயலா் உஞ்சை அரசன், சமூக சிந்தனையாளா் வி.சுந்தரவள்ளி, மாநில அமைப்புச் செயலா் கி.இளமாறன், மாநில துணைச் செயலா் எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்டச் செயலா் பெ.மு.செல்வநம்பி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக மாவட்ட துணைச் செயலா் இரா.கதிா்வளவன் வரவேற்றாா்.முடிவில் நகர செயலா் மு.கல்யாணசுந்தரம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.