ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்
அரியலூா் மாவட்டம், கீழப்பழூா் - திருமழபாடி பிரிவு சாலையில் தோ்தல் பறக்கும் படை மண்டல துணை வட்டாட்சியா் மனோகா் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழூா் - திருமழபாடி பிரிவு சாலையில் தோ்தல் பறக்கும் படை மண்டல துணை வட்டாட்சியா் மனோகா் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே வந்த தனியாா் மசாலா நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் ஆவணமின்றி ரூ.60,300 எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைப் பறிமுதல் செய்த அலுவலா்கள் அரியலூா் கருவூலத்தில் ரொக்கத்தை ஒப்படைத்தனா்.