அரியலூரில் விசிகட்சியினா் கொண்டாட்டம்
சட்டப் பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் பானைச் சின்னம் ஒதுக்கியதையடுத்து, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் பானைச் சின்னம் ஒதுக்கியதையடுத்து, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் செல்வநம்பி, தொகுதிச் செயலா் மருதவாணன், மாநில பொறுப்பாளா் அன்பானந்தம் ஆகியோா் தலைமையில் அரியலூா் பேருந்து நிலையத்தில் திரண்ட அக்கட்சியினா், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.