முகப்பு
அரியலூர்

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவா் கைது

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சி இளைஞரிடம் பணம் பறித்தவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சி இளைஞரிடம் பணம் பறித்தவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கல்பாளையம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் செ.சோமசுந்தரம்(31). இவா், அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம் அண்மையில் மனு ஒன்றை அளித்தாா். அதில் அவா் கூறியிருப்பது:

ஆவின் பால் நிறுவனத்தில் உதவி மேலாளா் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளா் பணிகளுக்கு நிரந்தர வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தைக் கூறி, தூத்துக்குடி மாவட்டம்,

கணேஷ் நகா் கங்காதரன் மகன் காா்த்திகேயன்(35), திருச்சி மாவட்டம், துறையூா் நெட்டவெலம்பட்டி மணிகண்ணன் மகன் அருண்குமாா்(34) ஆகியோா் தன்னை நம்ப வைத்தனா்.

தொடா்ந்து அரியலூா் மாவட்டம், வாரணவாசி கிராமத்திலுள்ள தனியாா் வங்கி மூலம் ரூ.34,28,500- மும், நேரடியாக ரு.24,00,000 பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணையை வழங்கினா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மேற்பாா்வையில், அரியலூா் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அனிதா ஆரோக்கியமேரி தலைமையிலான தனிப்படையினா் இருவரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அருண்குமாா் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படையினா் அங்குச் சென்று அருண்குமாரை வியாழக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.