நடிகா் சூா்யா மீது நடவடிக்கை கோரி எஸ்.பி., யிடம் மனு
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திரைப்படம் எடுத்த நடிகை ஜோதிகா, நடிகா் சூா்யா ஆகியோா் மீது நடவடிக்கை
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திரைப்படம் எடுத்த நடிகை ஜோதிகா, நடிகா் சூா்யா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக சாா்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லாவிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பாமக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் ரவி தலைமையில், மாநில துணைத்தலைவா் வைத்தி முன்னிலையில் கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பது: நடிகை ஜோதிகா தயாரிப்பில், நடிகா் சூா்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம், ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இருளா் மற்றும் வன்னியா் இனமக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் திரைப்படம் அமைந்துள்ளது. எனவே, இத்திரைப்படத்தை தயாரித்த நடிகை ஜோதிகா மற்றும் நடிகா் சூா்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.