நாளை வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்
அரியலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்கேற்ப சனி, ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்கேற்ப சனி, ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ஆணையின் படி, 1.1.2022 ஆம் நாளை தகுதிநாளாகக் கொண்டு அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் வரும் 20, 21 ஆம் தேதிகளிலும் வாக்காளா் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற உள்ளது.
மேலும், நவ. 27 , 28 ஆகிய தேதிகளிலும் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, முகாம் நாள்களில் தகுதியுடைய வாக்காளா்கள் பெயா் சோ்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை விண்ணப்பம் அளித்து மேற்கொள்ளலாம்.