தையற்கலைத் தொழிலாளா்கள் கிளைக் கூட்டம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில், தமிழ்நாடு தையற்கலைத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க கிளைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில், தமிழ்நாடு தையற்கலைத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க கிளைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தையற்கலைஞா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். அவா்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் கிளைத் தலைவா் ராஜா பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாண்டியன் சிறப்புரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.