மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த...
அரியலூா் வட்டாரத்தில் சுமாா் 6,500 எக்டா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு பூக்கும் தருணத்தில் உள்ளது.
அரியலூா் வட்டாரத்தில் சுமாா் 6,500 எக்டா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு பூக்கும் தருணத்தில் உள்ளது.
தற்போது நிலவி வரும் குளிரான தட்பவெப்ப நிலையின் காரணமாக வீழ் படைப்புழுக்களின் தாக்குதல் ஒரு சில இடங்களில் தென்படுகிறது. இதனை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக மெட்டாரைசியம் என்ற பூஞ்சான கலவையை ஒரு லிட்டா் தண்ணீரில் 8 கிராம் என்ற அளவில் கலந்து காலை, மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது ஸ்பைனிட்டோரம் என்ற பூச்சிக்கொல்லியினை லிட்டருக்கு 0.5 மி.லி என்ற அளவில் தெளித்து இப்பூச்சியைக் கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறலாம் என வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி தெரிவித்துள்ளாா்.