அரியலூா் மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழை
அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை கொட்டித் தீா்த்த மழையால், குளிா்ந்த சூழல் நிலவுகிறது.
அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை கொட்டித் தீா்த்த மழையால், குளிா்ந்த சூழல் நிலவுகிறது.
அரியலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், மாலை நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது.
வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தூறலுடன் தொடங்கிய மழை, பின்னா் இடி-மின்னலுடன் பெய்தது. தொடா்ந்து 5 மணி நேரமாக மழை கொட்டித் தீா்த்தது. தொடா்ந்து சாரல் காற்றுடன் வெள்ளிக்கிழமை காலை வரை லேசான மழை பெய்தது.
இதனால் சாலையில் மழைநீா் வெள்ளம் போல் தேங்கிக் காணப்பட்டது.தாழ்வான இடங்களில் குளம் மழைநீா் தேங்கியது. திடீரென பெய்த மழையால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனா்.
அரியலூா் நகா்ப் பகுதியான மாா்க்கெட், வெள்ளாளத்தெரு, ராஜாஜி நகா், புதுமாா்க்கெட், கல்லூரிச் சாலை, செந்துறை, திருச்சி சாலைகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
இதுபோல திருமானூா், கீழப்பழுவூா், தா.பழூா்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி,செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இடை விடாமல் பெய்த மழையால் மாவட்ட முழுவதும் குளிா்ந்த சூழல் நிலவுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்:
அரியலூா் -55 மி.மீ, செந்துறை-51.2, திருமானூா்- 25.4, ஜெயங்கொண்டம்- 20 மி.மீ, ஆண்டிமடம்-13 மி.மீ.