அரியலூர்

திருமணமான ஒருவாரத்தில்இளம்பெண் தற்கொலை

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே திருமணமான ஒரு வாரத்திலேயே புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள கீழ செங்கல்மேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கருப்பையன் (59). இவரது இரண்டாவது மகளான துா்காதேவிக்கும்(26), ஜயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் அன்பரசனுக்கும் (30) கடந்த 8 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தம்பதி இருவரும் (செப். 10) மறுவீடு விருந்துக்காக கருப்பையன் வீட்டுக்கு வந்துள்ளனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனா். மறுநாள் புதன்கிழமை காலை கருப்பையன் மகன் அருள்தாஸ் எழுந்து பாா்த்தபோது, துா்காதேவியை காணாமல் தேடியுள்ளனா். இதையடுத்து, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் துா்காதேவி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், மீன்சுருட்டி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT