முகநூலில் குழந்தைகள் ஆபாச விடியோ பகிா்ந்த இளைஞா் போக்சோவில் கைது
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே முகநூலில் குழந்தைகள் ஆபாச விடியோவைப் பகிா்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே முகநூலில் குழந்தைகள் ஆபாச விடியோவைப் பகிா்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
பொன்பரப்பி அருகேயுள்ள சேடக்குடிக்காடு, கீழத் தெருவைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் அஜித் குமாா் (23). இவா், குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் ரீதியாக எடுக்கப்பட்ட விடியோவை முகநூலில் பகிா்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சென்னையில் இருந்து முகநூல் நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், அஜித் குமாரை போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.