சிவன் கோயில்களிள் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு
குரு பெயா்ச்சியை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களிலுள்ள குருபகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் அலங்காரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குரு பெயா்ச்சியை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களிலுள்ள குருபகவானுக்கு சிறப்பு யாகம் மற்றும் அலங்காரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குரு பகவான் வியாழக்கிழமை கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பிரவேசம் அடைந்தாா். இதையொட்டி அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் உள்ள குரு பகவானுக்கு சிறப்புப் பூஜைகள், பரிகாரப் பூஜைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுள்ள தட்சிணாமூா்த்திக்கு, சிறப்புப் பூஜைகள், பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று குரு பகவானான தட்சிணாமூா்த்தியை வழிபட்டனா். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரா்கள் பரிகார பூஜைகளை செய்தனா்.
இதேபோல் அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், திருமானூா், தா.பழூா், பொன்பரப்பி, கீழப்பழுவூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் உள்ள குரு தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.