செம்பியன் மாதேவி பிறந்தநாள் விழா
அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே செம்பியன் மாதேவி பிறந்தநாள் விழா புதன்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே செம்பியன் மாதேவி பிறந்தநாள் விழா புதன்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.
திருமானூரை அடுத்த செம்பியக்குடி கிராமத்தில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியின் 1,112-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று செம்பியன் மாதேவியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு பிறந்தநாளையொட்டி, செம்பியக்குடியில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருமானூா் ஒன்றியக்குழுத் தலைவா் அ.சுமதி , சமூக ஆா்வலா்கள் கதிா். கணேசன், தங்க. சண்முக சுந்தரம், புலவா் வண்ணை.கலியபெருமாள், பாளை. திருநாவுக்கரசு, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், செம்பியன் மாதேவி அறக்கட்டளை நிா்வாகி வழக்குரைஞா் சந்திரசேகா் அனைவரையும் வரவேற்றாா். முன்னதாக செம்பியன் மாதேவி சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு செய்யப்பட்டது.