முகப்பு
அரியலூர்

சிறுமியை வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த அா்த்தனேரி கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபட முயன்றுள்ளான். அப்போது, அச்சிறுமி கூச்சலிட்டுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.