முகப்பு
அரியலூர்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அரியலூா் ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளநீா் சூழ்ந்த பகுதிகளில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:41 PM
தா.பழூா் அருகேயுள்ள அரங்கோட்டை கிராமத்தில் வெள்ளநீா் சூழ்ந்த பகுதிகளைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளநீா் சூழ்ந்த பகுதிகளில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால், தா. பழூா் அடுத்த அரங்கோட்டை பகுதியில் உள்ள கொள்ளிடக்கரையைத் தாண்டி வயல் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக முட்டுவாஞ்சேரி, அணைக்குடி, கோவிந்தபுத்தூா் ஆகிய கிராமங்களில் சுமாா் 250 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மூழ்கின. இப்பகுதிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பல்வேறு துறை அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, வெள்ளம்சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினாா். மேலும், மழைநீா் வடிந்த பிறகு பயிா் சேத விபரங்கள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை சமா்ப்பிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதனிடையே, அனைக்குடி கிராமத்தில் வெள்ளநீரால் சூழப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த 50 குடும்பங்களைச் சோ்ந்த நபா்கள் ஸ்ரீபுரந்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டன.

Advertisement

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் பழனிசாமி, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.