கல்வியை விருப்பத்தோடு படித்தால் சாதனை படைக்கலாம் என்றாா் கோவை அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியா் மாலதி.
அரியலூா் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சியை தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:
எப்போதும் தன்னால் முடியும் என்ற துணிவோடு, எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும். அறிவால் இவ்வுலகை வெல்ல வேண்டும். கல்வியை விருப்பத்தோடு படித்தால்தான், அதில் சாதனை படைக்க முடியும். வாழ்வில் முனைப்புடன் வெற்றிபெற ஒவ்வொரு மாணவனும் உறுதியேற்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, ஓய்வு பெற்ற அரசுப் பொறியாளா் கலைமணிதேவி , சிறுவளூா் அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னதுரை ஆகியோா் பயிற்சி அளித்தனா். பள்ளி செயலா் புகழேந்தி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் செளந்தராஜன் வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஜெயா, நம்பியாா், சரவணன், பிரேமா, தங்கமணி ஆகியோா் செய்தனா்.