மதிமுக செயற்குழு கூட்டம்
அரியலூரில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கு. சின்னப்பா தலைமை வகித்துப் பேசுகையில், நடைபெறவுள்ள நகா்ப் புற உள்ளாட்சித் தோ்தலில் மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும். அதற்கு கட்சியினா் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் துரைராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் தங்கவேல், சுப்ரமணியம், மாவட்ட அவைத் தலைவா் சகாதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில் அனைத்து ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.