எரக்குடி கிராமத்துக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த எரக்குடி கிராமத்துக்குப் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த எரக்குடி கிராமத்துக்குப் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமானூா் ஒன்றியத்துக்குட்பட்ட எரக்குடி கிராமம் வண்ணம் புத்தூா் அருகே உள்ளது. இங்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்கு பேருந்து வசதி கிடையாது.
அதனால், சுமாா் 2 கி.மீட்டா் தொலைவு கொண்ட வண்ணம்புத்தூா் கிராமத்துக்கு நடந்துசென்று அங்கிருந்து பேருந்து ஏறி கீழப்பழுவூா் சென்றுவருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். இதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அரியலூரிலிருந்து கீழப்பழுவூா், மலத்தான்குளம், அயன்சுத்தமல்லி, வேட்டக்குடி, எரக்குடி, வண்ணம் புத்தூா், சாத்தமங்கலம் வழியாக தஞ்சாவூருக்கும், அதேவழியில் அரியலூருக்கும், திருச்சி மாவட்டம் கல்லக்குடி (டால்மியாபுரம்) வழியாக சன்னாவூா், கொரத்தகுடி, ஆங்கியனூா், வேட்டக்குடி, அயன் சுத்தமல்லி மலத்தான் குளம், கீழப்பழுவூா், அரியலூா் வரை செல்லும் பேருந்தை வேட்டக்குடியிலிருந்து எரக்குடி வழியாகச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.