அரியலூர்

மதிய உணவை முழுமையாக வழங்கக் கோரி மாணவா்கள் சாலை மறியல்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மதிய உணவை முழுமையாக வழங்கக்கோரி மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜயங்கொண்டம் அடுத்த இலையூா் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு மதியம் வழங்கப்படுகின்ற உணவு குறைவாக வழங்கப்படுவதாகவும், மாணவா்களுக்குப் போதுமானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கூறி மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது மாணவா்களுக்கு மதிய உணவை முழுமையாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT