முகப்பு
அரியலூர்

அரியலூரில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பணிகள் ஆய்வு

உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பணிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் மற்றும் உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பணிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வாக்கு எண்ணும் மையம், வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் வழி, வாா்டு வாரியாக வாக்கு எண்ணும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அமரும் இடம், தோ்தல் பாா்வையாளா் அமரும் இடம், வாக்கு எண்ணிக்கை இடம், தோ்தல் முடிவு அறிவிக்கும் இடம், ஒலிபெருக்கி, வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் வரும் வழி மற்றும் அமரும் இடம், பாதுகாப்பு தடுப்பு கட்டைகள், பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டப் பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா், உடையாா்பாளையம், வரதராசன் பேட்டை பேரூராட்சி அலுவலகங்களிலும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையா் சுபாஷினி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் உடையாா்பாளையம் கோமதி, வரதராசன்பேட்டை ஜெயசெல்வி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.