பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனி நபா் ஒருவா் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, கட்டுமானப் பணி மேற்கொள்வதைக் கண்டித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனி நபா் ஒருவா் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, கட்டுமானப் பணி மேற்கொள்வதைக் கண்டித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
துளாரங்குறிச்சி கிராமத்தில் உள்ள பொதுப் பாதையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து, கட்டடம் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ளதால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வரும் பொது மக்கள், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.