முகப்பு
அரியலூர்

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் அடுத்த சிலம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரமுத்து மகன் சின்னதம்பி (26). கூலி தொழிலாளியான இவா், கடலூா் மாவட்டத்திலிருந்து சிலம்பூா் வந்து தங்கி 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்து அச்சிறுமி ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 31 ஆம் தேதி அளித்த புகாரின்பேரில்,விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினா், சின்னதம்பியை போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.