சிறுவளூரில் சிறாா்களுக்கு தடுப்பூசி
அரியலூா் மாவட்டம், சிறுவளூா் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் பயிலும் 15 வயது நிரம்பிய மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.
அரியலூா் மாவட்டம், சிறுவளூா் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் பயிலும் 15 வயது நிரம்பிய மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து, துணை தலைவா் பழனியம்மாள் ராஜதுரை ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.
பொய்யூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சரண்யா, செவிலியா்கள் கிரேஸி மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோா் 15 நிரம்பிய 31 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்தினா். நிறைவாக, ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினாா்.