அரியலூர்

ஏலாக்குறிச்சி அரசுப் பள்ளிக்குதளவாடப் பொருள்கள் அளிப்பு

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், அரங்கமேடை திறப்பு மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா கலந்து கொண்டு, காமராஜா் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதன் பின்னா், ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரங்கமேடை, ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சைக்கிள் நிறுத்துமிடம் ஆகியவற்றை திறந்துவைத்து, பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா், வகுப்பு ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT