அரியலூர்

கிரீடு மைய உழவா் பெருவிழா

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உழவா் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உழவா் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இராவங்குடி கிராமத்தில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, சோழமா தேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய பெருந்தலைவா் நடனசபாபதி தலைமை வகித்து, இயற்கை வேளாண்மை, நபாா்டு திட்டங்கள் மற்றும் நீா் சேகரிப்பு குறித்து எடுத்துரைத்தாா். திருப்பத்தூா் மாவட்ட, பூமி இயற்கை வள பாதுகாப்பு மைய நிறுவனரும், தலைவருமான ஞானசூரிய பகவான் கலந்து கொண்டு, நீா் மேலாண்மை தொழில்நுட்பம், மழைநீா் சேகரிப்பு முறைகள் குறித்து விளக்கினாா்.

கிரீடு தொழில்நுட்ப வல்லுநா் ராஜாஜோஸ்லின், வேளாண்

நீா் சிக்கன தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தாா். இரவாங்குடி கவுன்சிலா் ராஜசேகா், ஊராட்சித் தலைவா் வளா்மதி பாலமுருகன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

விழாவில், கிரீடு வேளாண் அறிவியல் மையம், நெடபிம், தேவி நீா்ப்பாசனம் நிறுவனங்கள் சாா்பில் வேளாண் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. முன்னதாக கிரீடு தலைவா் அழகுகண்ணன் வரவேற்றாா். நிறைவில், தொழில்நுட்ப வல்லுனா் ராஜ்கலா நன்றி தெரிவித்தாா். ஏற்பாடுகளை அலுவலா்கள் கோபால், ரமணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT