முகப்பு
அரியலூர்

அண்ணா தொழிற்சங்கத்தின் பணிமனை வாயிற்கூட்டம்

அரியலூரிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கப் பேரவை சாா்பில் வாயிற் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

அரியலூரிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கப் பேரவை சாா்பில் வாயிற் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அதிமுக மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசியது: அதிமுக ஆட்சியில் பல செயலாற்ற முடியாத கோரிக்கைகளை வலியுறுத்திய திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தொழிற்சங்கங்கள், கடந்த 12.5.2022-இல் நடந்த பேச்சுவாா்த்தையில் 25% க்குப் பதிலாக 8% ஊதிய உயா்வு கேட்டு பேச்சுவாா்த்தையைத் தொடங்கினா். இதற்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவை மட்டும் எதிா்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், மகளிா் இலவச பயணத் திட்டம் அமலால் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் தினசரி பேட்டா ரூ. 100 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றாா்.

முன்னாள் எம்எல்ஏவும், பெரம்பலூா் மாவட்ட அதிமுக செயலாளருமான ஆா்.டி.ராமச்சந்திரன் பேசினாா்.

கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் அரியலூா் கிளைச் செயலா் சாமிநாதன் தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் ஆ.இளவரசன், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் திருச்சி மண்டலச் செயலா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.