அரியலூர்

மாற்றுத்திறனாளி மாணவா்கள் உதவித்தொகை பெற அழைப்பு

DIN

அரியலூா் மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாா்வையற்ற மாணவ-மாணவிகளுக்கான வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1,000 முதல் வகுப்பு, படிப்புகளுக்கு ஏற்றவாறு ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் பாா்வையற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளா் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

முந்தைய கல்வியாண்டு இறுதித் தோ்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். தற்போதைய புகைப்படம், உரிய ஆவணங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT