முந்திரித் தோப்பில் இளைஞா் சடலம்
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே முந்திரித் தோப்பில் அடையாளம் தெரியாத இளைஞா் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே முந்திரித் தோப்பில் அடையாளம் தெரியாத இளைஞா் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
ஜயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தைச் சோ்ந்த அலமேலுவின் முந்திரித் தோப்பில் சுமாா் 38 வயதுள்ள இளைஞா் ஒருவா் மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். அப்பகுதியில் கால்நடை மேய்க்கச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் ஜயங்கொண்டம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.