முகப்பு
அரியலூர்

பெட்டிக்கடைக்கு தீ வைத்த முதியவரை தேடும் போலீஸாா்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் பெட்டிக் கடைக்கு தீ வைத்த முதியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் பெட்டிக் கடைக்கு தீ வைத்த முதியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

கீழப்பழுவூரைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (50). இவா் அரியலூா் பிராதானச் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியனுக்கும் (65) தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பெட்டிக் கடையை கலியபெருமாள் மூடிச் சென்ற நிலையில், அன்று மாலை அந்தக் கடை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த அரியலூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இதுகுறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது பெட்டிக்கடைக்கு தீவைத்தது சுப்பிரமணியன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.