அரியலூா் மாவட்டம், காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்புக் குழு கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், போதைப் பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு அக்கல்லூரியின் முதல்வா் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காமராஜ், அரியலூா் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா்கணேஷ், கயா்லாபாத் காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.