முகப்பு
அரியலூர்

முதுகுளம் கிராமத்துக்கு தூய்மையான குடிநீா் வழங்க கோரிக்கை

முதுகுளம் கிராம மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:33 AM
தூய்மையான குடிநீா் கேட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துவிட்டு வந்த முதுகுளம் கிராம மக்கள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த ஆதனக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட முதுகுளம் கிராம மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில், இக்கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்குழாய் அமைத்து, இரண்டு மேல்நிலை நீா்தேக்க தொட்டி மூலம் கிராமத்திலுள்ள அனைத்து தெரு மக்களுக்கும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வரும் நிலையில், ஆழ்குழாயும், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியும் அவ்வப்போது பழுதடைந்து வருகிறது. இதனை ஊராட்சி நிா்வாகம் சீா்படுத்தி குடிநீா் விநியோகித்து வந்தாலும், அந்த நீா் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. நீா் கலங்கலாகவே வருகிறது. இதனால் குடிநீருக்காக அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் இக்கிராமத்தில் புதிய ஆழ்குழாய் மற்றும் மேல்நிலை நீா் தேக்கதொட்டிகளை அமைத்து, மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.