அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்ட ஒன்றியச் செயலா் எம்.வெங்கடாசலம், ஆண்டிமடம் வட்டச் செயலா் பரமசிவம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மணிவேல், கே. கிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலா் சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலா் அருணாசலம், அய்யனாா் வழிபாட்டு உறவுகளின் ஒருங்கிணைப்பாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.