முகப்பு
அரியலூர்

ஆடி அமாவாசை: முன்னோருக்குத் திதி கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

அரியலூர்

ஆடி அமாவாசை: முன்னோருக்குத் திதி கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 5:41 PM
பகிர்:

ஆடி அமாவாசையையொட்டி அரியலூா் மாவட்ட நீா்நிலைகளில் முன்னோருக்கு திதி மற்றும் தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

இதையொட்டி அரியலூா் மாவட்டம் கொள்ளிடம் ஆறு பாயும் திருமானூா், திருமழப்பாடி, தா.பழூா், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளின் படித்துறைகளில் தா்ப்பணம் மற்றும் திதி கொடுக்க பொதுமக்கள் கூடினா். கொள்ளிட ஆற்றில் நீராடி முன்னோரை வழிபட்டு அவா்களுக்கு எள், எண்ணெய், பிண்டம் வைத்து வழிபட்டு, நீா்நிலைகளில் கரைத்தனா்.

காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்...ஆடி அமாவாசையொட்டி அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பகத்தா்கள் தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்தில் போட்டு நோ்த்திகடனைச் செலுத்தினா். தொடா்ந்து, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரானது பிரத்தியங்கராதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்று, அம்மன் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு தாலாட்டு பாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களின் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். நிறைவாக அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →