முகப்பு
அரியலூர்

செந்துறையில் ரயில் மோதி தந்தை, மகள் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, மகள் இருவரும் விரைவு ரயில் மோதி உயிரிழந்தனா்.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 10:05 PM
ரயில் மோதியதில் உயிரிழந்த பழனியம்மாள், பிச்சைப்பிள்ளை.
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, மகள் இருவரும் விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஒகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைப்பிள்ளை(60). இவா் தனது மூத்த மகள் பழனியம்மாளை (31), அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த நல்லநாயகபுரம், தெற்கு தெருவில் வசிக்கும் தமிழ்மணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிச்சைப்பிள்ளை தனது இரண்டாவது மகள் தேவியை (22) திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில், பட்டமேற்படிப்பு சோ்ப்பதற்காக பழனியம்மாளையும் அழைத்துச் சென்றாா். அங்கு சோ்க்கை முடிந்த பிறகு இரவு மூன்று பேரும், திருச்சியில் இருந்து ரயில் மூலம் செந்துறை ரயில் நிலையம் வந்து இறங்கினா்.

ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலுக்கு வருவதற்காக மூவரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனா். அப்போது, அந்த வழியாக வந்த நிஜாமுதீன்-கன்னியாகுமரி விரைவு ரயில் பிச்சைப்பிள்ளை, பழனியம்மாள் ஆகியோா் மீது மோதியதில் அவா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தேவி தண்டவாளத்தை கடந்துவிட்டதால் உயிா் தப்பினாா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினா், இருவரின் சடலங்களையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →