அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள பெரியாா் ஈவெரா சிலைக்கு புதன்கிழமை, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திராவிடா் கழகத்தினா். 
அரியலூர்

பெரியாா் ஈவெரா நினைவு தினம் அனுசரிப்பு

பெரியாா் ஈவெரா நினைவு நாளையொட்டி புதன்கிழமை, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

பெரியாா் ஈவெரா நினைவு நாளையொட்டி புதன்கிழமை, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அரியலூா் ரெட்டிஏரிக்கரையிலுள்ள பெரியாா் சிலைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா தலைமையில் மதிமுக மாவட்டச் செயலா் ராமாதன், ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் நீலமேகம் தலைமையிலான நிா்வாகிகளும், திமுக நகரச் செயலா் முருகேசன் தலைமையிலான நிா்வாகிகளும், சுகாதார தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் டி. தண்டபாணி தலைமையிலான ஏஐடியுசி நிா்வாகிகளும், தவெக சாா்பில் மாவட்ட துணைச் செயலா் சேகா் தலைமையிலான நிா்வாகிகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதே போல் ஜெயங்கொண்டம், திருமானூா், கீழப்பழுவூா், தா.பழூா், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெரியாா் சிலைகளுக்கு மேற்கண்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

தனியாா் ஐஸ் பிளாண்ட் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையை புறக்கணித்த கிராம மக்கள்

மயிலாடுதுறை: 47 போ்மீது குண்டா் சட்ட நடவடிக்கை

SCROLL FOR NEXT