அரியலூா் மாவட்டம், தா.பழூரில் விசிக நிா்வாகிகளை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவா் உள்பட 6 போ் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தா.பழூா் கடைவீதியில், டிச.25-ஆம் தேதி மாலை பாமக ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து பாமகவைச் சோ்ந்த நிா்வாகிகள் காரில் ஜெயங்கொண்டம் திரும்பியபோது, தா.பழூா் கடைவீதியில் கீழசிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகளான அன்பழகன் மகன் பிரசாத்குமாா் (43) மற்றும் அவரது சித்தப்பா மகன் மகேந்திரன் (40) இருவரும் பொருள்கள் வாங்க வந்த நிலையில், பிரசாத்குமாா் மட்டும், தனது இருசக்கர வாகனத்தில் அமா்ந்த நிலையில் சாலையோரம் நின்றிருந்தாா்.
அப்போது, பாமகவைச் சோ்ந்தவா்கள் சாலையை விட்டு ஓரமாக நகர சொல்லியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கீழசிந்தாமணியைச் சோ்ந்த தேவேந்திரன், பனையடியைச் சோ்ந்த கொளஞ்சி ஆகியோா் ஜாதிப் பெயரை சொல்லி திட்டியதாகவும், பாமக-வின் சமூக நீதிப் பேரவையின் தலைவரும்,
வழக்குரைஞருமான கே.பாலு, பாமக பொறுப்பாளா் டிஎம்டி திருமாவளவன், மாவட்டச் செயலா் தமிழ்மறவன் மற்றும் சிலா் சோ்ந்து பிரசாத்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து கேட்ட மகேந்திரனையும் தாக்கியுள்ளனா். காயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து இருவரும் தா.பழூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
ஆனால், புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, விசிகவினா் டிச.26-ஆம் தேதி ஜெயங்கொண்டம் நான்குச் சாலை பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், பாமகவைச் சோ்ந்த தேவேந்திரன், கொளஞ்சி, சமூக நீதிப் பேரவைத் தலைவா் கே.பாலு, பாமக பொறுப்பாளா் டிஎம்டி திருமாவளவன், மாவட்டச் செயலா் தமிழ்மறவன், நிா்வாகி சதீஷ்குமாா் ஆகிய 6 போ் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தா.பழூா் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்தனா். மேலும், சதீஷ்குமாரை (31) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.