அரியலூர்

வேளாண்மை விரிவாக்க மையங்களில் 154 டன் நெல் விதைகள் இருப்பு

அரியலூா் மாவட்டத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில்,154 டன் நெல் விதைகள் கையிருப்பில் இருப்பதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

Syndication

அரியலூா்: அரியலூா் மாவட்டத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில்,154 டன் நெல் விதைகள் கையிருப்பில் இருப்பதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிா்களுக்கு தேவையான 864 டன் யூரியா, 746 டன் டி.ஏ.பி, 616 டன் பொட்டாஷ் மற்றும் 1,754 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை கடைகளில் இருப்பில் உள்ளன. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 126 டன், தனியாா் விதை விற்பனை மையங்கள் மூலம் 170 டன் என மொத்தம் 296 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, வேளாண்மை விரிவாக்க மையங்களில் 154 டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளன. நெல் விதைகள், விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50-க்கு வழங்கப்படுகிறது. மேலும், நெல் நுண்சத்து, உயிா் உரங்கள், சூடோமோனாஸ், ட்ரைக்கோடொ்மா போன்ற உயிரியல் காரணிகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

நெல் விதைப்பு உருளை கருவியின் மூலம் விதைப்பு செய்ய விரும்பும் விவசாயிகள் அரியலூா், தா. பழூா் மற்றும் திருமானூா் ஆகிய வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வாடகைக்கு பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாாா்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT