பொறியாளா்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அரியலூா் மாவட்ட கட்டுமானப் பொறியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அரியலூா் எம்எல்ஏ கு. சின்னப்பாவிடம், சங்கத் தலைவா் அறிவானந்தம், செயலா் நாகமுத்து, பொருளாளா் காா்த்திக், சாசனத் தலைவா் சீனிவாசன், துணைத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:
தமிழ்நாட்டில் வழக்குரைஞா் மற்றும் மருத்துவா்களுக்கு உள்ளதுபோல, பொறியாளா்களுக்கும் தனி கவுன்சில் அமைத்துத் தர வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் தனித்தனியாக உள்ள பொறியாளா் பதிவு முறையை நீக்கி மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறையைக் கொண்டு வர வேண்டும். சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது பொறியாளா்களுக்கு ஓடிபி வசதி வர செய்து தர வேண்டும்.
நிகழ்வில் முன்னாள் தலைவா்கள் அழகுதாசன், ஏ.எஸ்.ஏ. செந்தில்குமாா். அன்பழகன், இணைப் பொருளாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.